என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நாளை எம்.ஜி.ஆர். நினைவு தின மவுன ஊர்வலம்
- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- தூத்துக்குடி டூவிபுரத்தில் இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் முன்பு இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.
முக்கிய வீதி வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் சென்று அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரபகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நிர்வாகிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்