search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நாளை எம்.ஜி.ஆர். நினைவு தின மவுன ஊர்வலம்
    X

    சண்முகநாதன்


    தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நாளை எம்.ஜி.ஆர். நினைவு தின மவுன ஊர்வலம்

    • முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தூத்துக்குடி டூவிபுரத்தில் இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் முன்பு இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.

    முக்கிய வீதி வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் சென்று அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரபகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நிர்வாகிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×