search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்ற தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணியினர்.

    தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக ரவி என்ற பொன்பாண்டி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுற்றுச்சூழல் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக ரவி என்ற பொன்பாண்டி, தலைவராக சிவசுப்பிர மணியன், துணைத்தலைவராக மனோகரன், துணை அமைப்பா ளராக செந்தில்குமார், ஜெகதீஸ்வீராயன், பிரபாகரன், ஜீவா பாலமுருகன், சுடலை, ஆகியோர் தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள இல்லத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை, சுற்றுச்சூழல் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகள், திட்டங்கள், மாநில வளர்ச்சி பணிகளை அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுற்றுச்சூழல் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொழிலாளர் அணி அமைப்பாளர் ரகுராமன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவருமான சரவணக்குமார், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்மலிங்கம், ஓன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சிமன்ற உறுப்பினர் சக்திவேல், இளைஞர் அணி ராஜேந்திரன், கவுதம் மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×