என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா
    X

    செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா

    • செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா நடந்தது.
    • புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் சத்யன் தொடங்கி வைத்தார்.

    நிர்வாக இயக்குநர் சங்கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தலைமை அதிகாரி சங்கர்குமார் ஜா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை மேம்படுத்த யோகா உதவுகிறது. உலகெங்கிலும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    தொடர்ந்து விழாவில் மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து தனி திறமைகளை வெளிப்படுத்தினர். புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    விழாவை பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் தேவராஜூலு நன்றி கூறினார்.

    Next Story
    ×