search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறகுபந்து சாம்பியன்ஷிப் போட்டி
    X

    இறகுபந்து சாம்பியன்ஷிப் போட்டி

    • காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இறகுபந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட ஜூனியர், சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் பிருந்தாவன் உள் விளை யாட்டரங்கில் நடை பெற்றது.போட்டிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழு வதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் கலந்து கொண்ட னர். போட்டிகள் 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வர்கள் என பல்வேறு பிரிவு களில் ஆண், பெண் தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டன.பரிசளிப்பு விழாவில் மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அபுதாஹிர் வரவேற்றார். மாவட்ட செயலர் பாரூக் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் தமிழ்நாடு அணி சார்பில் தேசிய போட்டியில் பங்குபெற்ற மகரிஷி பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரிக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவித்தனர். வெற்றி பெற்றவர்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்க தாகும். மாவட்ட சேர்மன் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×