என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    X

    கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்

    • சிவகங்கை அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இதுதொடர்பாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கந்து வட்டி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பலர் போலீஸ் நிலைய ங்களில் புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

    சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் திருநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி ராஜாத்தி ஆகியோரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    இதற்காக 5 புரோ நோட்டுக்கள், 2 வெற்று பத்திரத்தில் பிரியா கையெழுத்திட்டு கொடுத்து ள்ளார்.

    கடனை வட்டியுடன் பிரியா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் காளையார்கோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வட்டி கேட்டு சுரேஷ், ராஜாத்தி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    Next Story
    ×