என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்
    X

    சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்

    • தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த 2 ரெயில் நிலையங்களும் 100 ஆண்டு களுக்கு முன்பே உள்ளது.

    ஆங்கிலேயர்கள் இலங்கை செல்ல தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமைத்து ரெயில் போக்குவரத்து நடைபெற்ற போது காரைக்குடி, மானா மதுரை ரெயில் நிலை யங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து வந்தது. ஆனால் அகல ரெயில் பாதைபணி முடிந்த பின் குறைந்த அளவு ரெயில் வசதியே உள்ளது.

    தற்போது ராமேசுவரம்- சென்னை மார்க்கத்தில் தினசரி 2 ரெயில்கள் மட்டுமே உள்ளது. வாரந்திர ரெயில்களும் தற்போது ராமேசுவரம் வரை செல்லா ததால் அடிக்கடி ரத்து செய்யபடுகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தற்போது பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களை புறக்கணித்து ரெயில் நேர அட்டவணை தயார் செய்யபட்டு அந்த சிறப்பு ரெயில் நிற்காமல் காரைக்குடியை அடுத்த அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

    மிகப்பெரிய ரெயில் நிலையமாக உள்ள மானா மதுரையிலும், மாவட்ட தலைநகரமாக உள்ள சிவகங்கையிலும் நிற்காமல் செல்வதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வரு கின்றனர்.

    செங்கோட்டை அதி விரைவு ரெயிலை நிறுத்தா மல் தென்னக ரெயில்வே புறக்கணிப்பதாக பயணி கள் கூறுகின்றனர். தற்போது வரும் ஜுன் முதல் தேதியில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் செல்ல உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை அதிவிரைவு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. 2 டயர் ஏசி 2, 3 டயர் ஏசி 5, படுக்கை வசதி கொண்ட பெட்டி 5. பொதுப்பெட்டிகள் 3,2 சுமைகள் ஏற்றும் வசதி கொண்ட பெட்டி என மொத்தம் 17 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக் கப்பட உள்ளது.

    வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமை இயக்கப்பட உள்ள இந்த ரெயில் ஜுன் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங் கோட்டையை சென்ற டையும். மறுமார்க்கமாக வண்டி எண்.20684 செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.

    விழுப்புரம், மயிலா டுதுறை உள்ளிட்ட 16 இடங்களில் நின்று செல் லும் என்றும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக் குடியில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் இல்லாத கமுதி, பார்த்திபனூர், அபிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் ரெயில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தென் னக ரெயில்வே நிர்வாகம் இந்த அதிவிரைவு ரெயிலை தலைநகரான சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நிறுத்தாமல் புறக்க ணித்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சிவகங்கை, மானாமதுரை யை இந்த ரெயில் புறக்கணிப்பதால் சிவகங்கை எம்.பி., சிவகங்கை, மானாமதுரை எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து சிறப்பு ரெயிலை சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நிறுத்தி செல்ல வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×