search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
    X

    ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

    • ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்

    காளையார்கோயில்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசபரோஸ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலார்கள் ஜான் அந்தோனி, அமலசேவியர், ஜீவா ஆனந்தி, உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அரசு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×