search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

    • சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சரால் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது 2022 வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெறுவ தற்கு கீழ்காணும் தகுதிகளை யுடைய தமிழக அரசின் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்ளை (தமிழ மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகதிதில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×