search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
    X

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

    • அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் ஆகியோர் பாராட்டினர்.

    தேவகோட்டை

    மதுரை என்.எம்.எஸ். மற்றும் கே.எஸ்.பி. கணேசன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நடந்தது. இதில் புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6,7,8 வகுப்பு பிரிவில் ''அறிவொளி தந்த காமராஜர்'' தலைப்பில் 7-ம் வகுப்பு மாணவிகள் கலா ஸ்ரீ, தியா, 8-ம் வகுப்பு மாணவிகள் அக்சயா, தீபிகா, ''தன் நலம் கருதாத காமராஜர்'' என்ற தலைப்பில் 9-ம் வகுப்பு மாணவர்கள் பால் தினகரன், முகிதா, ஆரோக்கிய டெல்பின், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×