என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிரதோஷ வழிபாடு
Byமாலை மலர்20 March 2023 7:46 AM GMT
- மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷபூஜை நடந்தது.
வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி பிரகாரம் வலம்வந்து தீபாராதனை நடந்தது.
சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுளீசுவரருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமக்குடி ரோட்டில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர் காசிநந்திக்கு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், இடைக்காட்டூர் ஆழி மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில்களிலும் பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X