என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ரேசன் கடை
Byமாலை மலர்7 Sep 2022 8:06 AM GMT
- பேராணிபட்டி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ரேசன் கடையை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டபோது பேராணிபட்டி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தற்போது பேராணிபட்டியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார். அப்ேபாது தங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த, செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, மாவட்ட கவுன்சிலர் கோமதி, ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், கண்ணன் மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X