search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
    X

    கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    • திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டியில் உள்ளது முத்து மாரியம்மன் கோவில். இங்கு சித்திரை திருவிழாவை யொட்டி கடந்த 9-ந்தேதி உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தார். பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் நடந்தது. 5-ம் நாளன்று பால்குட விழாவும் தொடர்ந்து 6-ம் நாளில் அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்தார்.

    7-ம் நாளில் அம்மன் பூப் பல்லக்கிலும், 8-ம் நாளன்று குதிரை வாகனத்திலும் அருள்பாலித்தார். 9-ம் நாளான நேற்று அதிகாலை முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவி யங்களால் அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பின்னர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தரு ளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்து மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் வடம் பிடிக்கத் தேரோட்டம் சிறப்பபாக நடைபெற்றது.

    பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளை யாத்தங்குடி, திருப்பத்தூர், சேவிணிப்பட்டி, கீழச் செவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×