search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திறப்பு
    X

    இலவச கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர்மன்ற தலைவர் முத்துதுரை திறந்து வைத்தார்.அருகில் துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன் உள்ளனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திறப்பு

    • காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திறக்கப்பட்டது.
    • பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பழைய கட்டண கழிவறையை ரூ.3.75 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதை பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகராட்சிஆணையாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சி உதவி பொறியாளர் சீமா, கவுன்சிலர்கள் சோனா கண்ணன், முகமதுசித்திக், பிலோமினா, அஞ்சலிதேவி, பூமிநாதன், முன்னாள் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் பாண்டி, பாலாஜி கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×