என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
    X

    மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அருகில் தமிழரசி எம்.எல்.எ. உள்ளார்.

    மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

    • மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி குருப், குவளைவேலி கண்மாய்க்கு தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதையடுத்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், குவளைவேலி கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட இடங்களில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்களுடன் கலுங்கில் இருந்த அடைப்பை தண்ணீர் வெளியேறும் வகையில் கிராமத்தினர் உதவியுடன் சரி செய்யபட்டது.

    மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேற்கு புறத்தில் கருவக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவளைவேலி கண்மாய் கழுங்கை அடைக்கக்கூடாது என குவளைவேலி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவறுத்தப்பட்டு, குவளைவேலி கண்மாயின் நீர் நிலைமை, விளத்தூர் காலனி குடியிருப்பில் இருந்த வீடுகளைச் சுற்றி உள்ள தண்ணீர் ஆகியவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, அந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், பூமிநாதன், மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×