என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக்கில் சென்ற வாலிபர் பலி
- சிங்கம்புணரி அருகே பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பலியானார்.
- சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிதம்பரம் ஆயக்குடியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவர் சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டியில் தனது பெரியம்மா இல்ல நிகழ்ச்சிக்கு வந்தார். பெரியம்மா மகன் அருண்குமாருடன் சிங்கம்புணரி வங்கியில் பண பரிவர்த்தனைக்காக சென்றனர்.
அதற்கான ஆவணம் தேவைப்பட்டதால் கார்த்திக் மட்டும் இருசக்கர வாகனத்தில் ஒடுவன்பட்டி நோக்கி சென்றார். அதிவேகமாக பைக்கில் வந்த கார்த்திக் அணைக்கரைப்பட்டி பாலாற்றில் அமைந்துள்ள பாலத்தில் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் கார்த்திக்கை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.
சிங்கம்புணரி காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்