என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த வயதுடைய ஊராட்சி தலைவி தேர்வு
    X

    ஊராட்சி மன்ற தலைவி நிலா.

    குறைந்த வயதுடைய ஊராட்சி தலைவி தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.
    • காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 -ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் தேவசேனா ராஜேந்திரன். இவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.

    காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தேர்தலில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா ராஜேந்திரன் மகள் நிலா (வயது22) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவரை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக நிலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தராஜ் அறிவித்தார்.

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் நிலாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான நிலா 22 வயது உள்ள தமிழகத்தில் மிகவும் குறைந்த வயது ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

    Next Story
    ×