search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பகுதியில் 10 டாஸ்மாக் பார்களுக்கு சீல்
    X

    மேட்டுப்பாளையம் பகுதியில் 10 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

    • மேட்டுப்பாளையம் வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 16 உள்ளது.
    • பார் நடத்துவதற்கான தொகையை கட்டாமல் அதன் உரிமையாளர்கள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் கடந்த ஓராண்டாக டாஸ்மாக் மதுக்கடையில் பார் ஏலம் எடுத்தவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேட்டுப்பாளையம் வட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் 16 உள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் அரசு சார்பில் மது அருந்துவதற்கும் அதற்கு தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கும் பார்கள் உள்ளன.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லையில் ஓடந்துறை 1 கடை, உருளைக்கிழங்கு மண்டி 10, பஸ் நிலையம் 1, அபிராமி பஸ் நிறுத்தம் 1, சி.டி.சி பகுதியில் 1, பூ மார்க்கெட் சந்தில் 3 கடைகள் என 8 கடைகள் உள்ளன.

    சிறுமுகை போலீஸ் நிலைய எல்லையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டி பகுதியில் 1, பெத்திக்குட்டையில் 1, வெள்ளிப்பாளையத்தில் 2 என 4 கடைகள். காரமடை போலீஸ் நிலைய எல்லையில் காரமடை, திம்மம்பாளையம், கணுவாய்ப்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு என 5 கடைகள் உள்ளன.

    இதில் கடந்த ஓராண்டாக மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பார் நடத்துவதற்கான தொகையை கட்டாமல் அதன் உரிமையாளர்கள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பார்களுக்கு சீல் வைக்க மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து நேற்று மேட்டுப்பாளையத்தில் பூ மார்க்கெட் சந்தில் 2 கடைகள், ஓடந்துறை, சிறுமு கையில் வெள்ளிப்பா ளையத்தில் 2 கடைகள், பெத்திகுட்டை, காரமடையில் , தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கணுவாய்ப்பாளையம் என மொத்தம் 10 கடைகளுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    Next Story
    ×