என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாய்-மகள்களுக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
- குடிபோதையில் வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முயன்றார்.
- ஜோதி அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல்.
திருவையாறு:
திருவையாறு அருகே கல்யாணபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி ஜோதி (வயது 55).
இதில் சீனிவாசன் இறந்து விட்டார்.
ஜோதி தனது மகள்கள் வசந்தி (35), ரம்யா (30) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (25) என்பவர் குடிபோதையில் ஜோதி வீட்டிற்கு சென்று ரம்யாவிடம் தவறாக நடக்க முயன்றார்.
இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஜோதி புகார் செய்ய இருப்பதாக கேள்விப்பட்ட சரவணன் மீண்டும் தகராறு செய்து ஜோதி அவரது மகள்கள் ரம்யா, வசந்தி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்