என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

    • திருவள்ளூரில் பல்வேறு பகுதிகள் மிச்சாங் புயலால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
    • தற்போது மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மரங்கள் அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களிலும், செங்கல்பட்டில் 6 தாலுகாக்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×