search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; 2 மாணவர்கள் காயம்
    X

    பாளை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; 2 மாணவர்கள் காயம்

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • வேன் முன்னீர்பள்ளம் அடுத்த தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    வேன் கவிழ்ந்து விபத்து

    இந்தப் பள்ளியில் மேலப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்களை அழைத்து செல்வதற்காக பள்ளி வேன் ஒன்று சென்றது.

    வேனை மேலப்பா ளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

    2 மாணவர்கள் காயம்

    வேன் முன்னீர்பள்ளம் அடுத்த தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் சென்ற 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெ ல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×