என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் தமிழ்நாடு ஓட்டலில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு
- தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது.
- பூங்கா முன்பு உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது.
நங்கவள்ளி:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு சேலம், ஈரோடு ,நாமக்கல், தர்மபு ரியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பூங்கா முன்பு உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஓட்டலில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று மேட்டூருக்கு வந்தார்.
தமிழ்நாடு ஓட்டலில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஓட்டலில் அறைகள் ஒவ்வொன்றாக திறந்து பார்த்த அமைச்சர் பராமரிப்பு பணிகள் மற்றும் வருவாய் குறித்து உடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தூக்கணாம் பட்டி காவிரி ஆற்றில் படகு சவாரி செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர் களிடம் கூறியதாவது:-
ஏற்காட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தை கைப்பற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் கோவில்கள் உள்ளன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு 20 லட்சம் பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர்.
தற்போது மூன்று மாதத்தில் 30 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். தமிழகத்தில் 300 சுற்றுளா தலங்களை தேர்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்பு நந்தூரி, முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.எம். செல்வகணபதி, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம். வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்