என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் சாவு
- மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம்புதூர் ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 63).
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






