search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை  8 ஆயிரத்து 95 பேர் எழுதுகிறார்கள்
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 8 ஆயிரத்து 95 பேர் எழுதுகிறார்கள்

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடு களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான போலீசார் செய்து வரு கிறார்கள். இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியின் தேர்வு மையத்தை மாற்றி மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி சீட்டு பெற்ற 1000 விண்ணப்ப தாரர்களும் அம்மையத்தின் எதிரில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரி மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.

    எனவே மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் சின்னகவுண்டா புரத்தில் உள்ள ஏ.வி. எஸ். கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என சேலம் மாவட்ட போலீஸ் சூபப்பிரண்டு அருண்கபிலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×