search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 65 கிலோ இறைச்சி பறிமுதல்
    X

    சேலத்தில் 65 கிலோ இறைச்சி பறிமுதல்

    • சேலம் மாநகர பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
    • குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி என 64 கிலோவை அதிரடியாக பறிமுதல் செய்து இறைச்சியை அழித்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகர பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலை மையில் அலுவலர்கள் சூர மங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி பகுதிகளில் உள்ள 15 இறைச்சி கடைக ளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் சுகாதாரமற்ற முறையிலும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி என 64 கிலோவை அதிரடியாக பறிமுதல் செய்து இறைச்சியை அழித்தனர். மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறும் போது, இறைச்சி கடையில் சுகாதாரமற்ற நிலையில் கடையின் முன்பு இறைச் சியை தொங்கவிடக்கூடாது.

    துருப்பிடிக்காத கம்பியில் சுகாதாரமான முறையில் தொங்கவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டது. பணியாளர்கள் கையுறை , தலை உறை, ஏப்ரான் அணிந்து சுகாதா ரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற சீட்டு கொண்டு கவர் செய்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் இது போன்ற நடவ டிக்கைகள் பின்பற்றாத கடைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×