search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த21 ஆயிரம் பேருக்கு ரூ.1.39 கோடி அபராதம்
    X

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த21 ஆயிரம் பேருக்கு ரூ.1.39 கோடி அபராதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்பவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் மேற்பார்வையில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர்.

    இந்த சோதனையின் மூலம் டிக்கெட் இன்றி பயணித்த 12 ஆயிரத்து 890 பேருக்கு 98.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்தனர். அதே போல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன்பதிவு பெடடியிலும், 2-ம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்து கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் என முறைகேடாக பயணித்த 8 ஆயிரத்து 454 பேரிடம் இருந்து 40.84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படடுள்ளது.

    இது போல ரெயில்களில் விதி முறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்றதாக 27 பயணிகளுக்கு மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓ ட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம், முறைகேடாக பயணம், அதிக லக்கேஜ் ஆகிய வற்றிற்காக 21 ஆயிரத்து 271 பேரிடம் இருந்து 1 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 461 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரெயிலில் பயணிகள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×