search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வழக்கில் தப்பி ஓடிய  வாலிபர் இன்று கைது
    X

    கஞ்சா வழக்கில் தப்பி ஓடிய வாலிபர் இன்று கைது

    • சேலம் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது.
    • இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு, நாட்டாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பதாக கடந்த மாதம் ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கி ருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்ட நிலையில், மீதிமுள்ள 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தப்பி யோடியவர் சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் யுவராஜ் என்கிற ராஜா (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை இன்று காலை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×