என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுள் தண்டனை கைதியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
    X

    ஆயுள் தண்டனை கைதியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

    • தினேஷ்குமார் (44). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த ஜூன் 17-ந் தேதி நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சில நபர்கள் தினேஷை திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.5200 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, ஞானபத்மா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (44). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த ஜூன் 17-ந் தேதி நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வழிப்பறி

    அப்போது அங்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சில நபர்கள் தினேஷை திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.5200 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (45), நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி அரூரைச் சேர்ந்த இளங்கோவன் (48) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈரோடு ரமேஷ், எடப்பாடி கொங்கணாபுரம் ஜனார்த்தனன், சரவணன், கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி குமார், பழனிசாமி, துரை, சந்தோஷ்குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

    ஆயுள் தண்டனை கைதி

    இந்த வழக்கில் தொடர்பு டைய கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி குமார் (43) என்பவரை ஏற்காடு அடிவாரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நெத்திமேடு வழிப்பறி வழக்கில் அவரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் ஒரு நாள் அனுமதி பெற்று நேற்று அவரை காவலில் எடுத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவரை கோவை சிறையில் மீண்டும் அடைக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ள னர்.

    Next Story
    ×