search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் பலி
    X

    சேலத்தில் ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் பலி

    • முஜிபுர் ரஹ்மான் (வயது 28). இவர் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.
    • ஒரு வளைவில் ஆட்டோவை திருப்பும் போது எதிர்பாராத விதமாக முஜிபுர் ரஹ்மான் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகிர் பெரியம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது நவாப் ஜான். இவரது மகன் முஜிபுர் ரஹ்மான் (வயது 28). இவர் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஜாகிர் சின்னம்மா பாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஒரு வளைவில் ஆட்டோவை திருப்பும் போது எதிர்பாராத விதமாக முஜிபுர் ரஹ்மான் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகார் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×