என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கேபிள் வயர் திருட்டு 6 பேருக்கு காப்பு
- ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சில ஆட்களுடன் பனமரத்துப்பட்டி, தும்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
- அதற்கு பயன்படும் இயந்திரத்துக்கு தேவையான, 200 கி.மீ., கேபிள் வயர் வைத்திருந்தார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சூரியம்பா ளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சில ஆட்களுடன் பனமரத்துப்பட்டி, தும்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பயன்படும் இயந்தி ரத்துக்கு தேவையான, 200 கி.மீ., கேபிள் வயர் வைத்தி ருந்தார். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு ரவிச்சந்தி ரன் சாப்பிட சென்று விட்டு திரும்பி வந்தபோது வயரை காணவில்லை. இது குறித்து மக்களிடம் தெரிவித்த அவர் அப்பகுதியில் தேடினார்.
அப்போது வயர் எரிக்கப்படும் நாற்றம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது, 6 பேர், கேபிள் வயரை எரித்துக்கொண்டிருந்தனர். அந்த வயர் மேற்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் தீ உருகிய பின், உட்பகுதியில் உள்ள காப்பர் கம்பியை விற்க திட்டமிட்டிருந்தனர். இதனால் ரவிச்சந்திரன் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து, வேடப்பட்டியை சேர்ந்த ஜெய்ஹிந்த் (23), ராஜா (29) சின்னதம்பி (30) கார்த்தி (21), தங்கராஜ் (50) நாகராஜ் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்