search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே மேம்பால பணி : மல்லியக்கரை-ஆத்தூர் இடையே 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
    X

    ரெயில்வே மேம்பால பணி : மல்லியக்கரை-ஆத்தூர் இடையே 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

    • மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 30-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் அருகில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அதாவது, ராசிபுரம்-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் வாழப்பாடி வழியாகவும் (வாழப்பாடி திம்மநாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி-ஆத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் தம்மம்பட்டி-கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழியாக ஆத்தூருக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே, மல்லியக்கரை-ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் முடியும் வரை கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் தேவகி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×