search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாப்பிடுவதில் தகராறு வடமாநில வாலிபரை கொன்ற  2 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    சாப்பிடுவதில் தகராறு வடமாநில வாலிபரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

    • பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.
    • செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கனககிரி கிராமம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.

    தொழிலாளர்கள்

    மேலும் அந்த இடத்தில் இரும்பு தகர செட் அமைத்து அதில் செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    கொலை

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தகர செட்டின் முதல் அறையில் பீகார் மாநிலம் புல்வாரியா கிழக்கு பகுதியை சேர்ந்த முகமது நகரூதின் (31), பீகார் மாநிலம் நாராயணபுரம் சகோரியா பகுதியை சேர்ந்த ஜெயகுார்ஷ்தேவ், அமித்குமார் ஆகியோர் ஒன்றாக தங்கி இருந்தனர். அன்று இரவு அவர்களுக்குள் சாப்பாடு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து இரவு தூங்கும்போது முகமது நகரூதின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.

    இது குறித்து அப்போதைய மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோரை மார்ச் மாதம் 3-ந்தேதி கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    ஆயுள் தண்டனை

    இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1-ல் விசா ரணை நடைபெற்று வந்தது. சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி

    ஜெகநாதன் தீர்ப்பு வழங்கினார். ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 -ம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    சூப்பிரண்டு பாராட்டு

    இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க விரைவாக செயல்பட்ட மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய தற்போதைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பாராட்டினார்.

    Next Story
    ×