search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தன  மரம் வெட்டி  விற்பனை
    X

    சந்தன மரம் வெட்டி விற்பனை

    • கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட வன அதிகாரி கஷ்யப்ஷஷாங் ரவி உத்தரவு படி ஏற்காடு வனச்சரக அதிகாரி முருகன் தலைமையில் வனவர்கள் குஞ்சய் , சக்திவேல், தமிழரசன் மற்றும் வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 4-ந் தேதி சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாழவந்திைய சேர்ந்த ரெங்கராஜ் (59) என்பவர் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 9 கிலோ எடையுள்ள சந்தனமரக்கட்டைகளை விற்பனை செய்ய முயலும் போது, சந்தன மரக்கட்டைகளை வாங்கிய நபரான சையத்உமர் (60) ஆகிய 2 பேரையும் பாகலூரில் பிடித்து ஏற்காடு வனச்சரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

    பின்னர் சந்தன மரக்குற்ற வழக்கு பதிவு செய்து 2 பேருக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக்காட்டில் சந்தன மரம் வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×