என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையத்தில்இறந்து கிடந்தவரால் பரபரப்பு
- திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது மயங்கி கிடந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் இறந்த கிடந்த நபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






