search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு அதிகமாக பரவுகிறது என்பது வதந்தி: வைரஸ் காய்ச்சலுக்கு 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்- நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் பேட்டி
    X

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள்.

    டெங்கு அதிகமாக பரவுகிறது என்பது வதந்தி: வைரஸ் காய்ச்சலுக்கு 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்- நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் பேட்டி

    • நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
    • காய்ச்சலுக்கு வருபவர்களுக்காக தனிவார்டு செயல்பட்டு வருவதாக டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் முக்கியமான மருத்துவ மனைகளில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    1200 உள்நோயாளிகள்

    இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அந்த வகையில் 1,200 உள்நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

    நோயாளிகளின் உறவினர்களும் பெரும் அளவில் வருவதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனி காணப்படுகிறது. இதனால் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக தினமும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு 50 க்கும் மேற்பட்டோர் செல்வதாக தகவல் வெளியானது.

    அதே நேரம் தினமும் காய்ச்சலுக்கு அதிகமானோர் சிகிச்சைக்காக வருவதால் போதிய படுக்கை வசதி இன்றி ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தற்போது பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதி கரித்துள்ளது. டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை. காய்ச்சலுக்கு வருபவர்களுக்காக 30 படுக்கைகள் கொண்ட தனிவார்டு செயல்பட்டு வருகிறது.

    மேலும் 30 படுக்கைகள் கொண்ட 'ஸ்டெப்டவுன்' வார்டு என்ற சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரு பவர்களை காய்ச்சல் வார்டில் 2 நாள் வைத்து சிகிச்சை அளிக்கிறோம். பின்னர் அவர்கள் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதன்பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தற்போது 15 பேர் மட்டுமே காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 3 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளது. மற்றவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்தான் இருக்கிறது.

    தற்போது அதிக மானோர் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதும், ஒரே படுக்கையில் 2, 3 பேருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுவதும் வதந்தி. காய்ச்சலுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள் அந்த படுக்கையில் படுத்திருந்திருக்கலாம். அதனை பார்த்து 2,3 பேருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுகின்றனர். அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தாலும் அவர்களுக்காக சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×