என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று காலை போலீஸ் சோதனையில் ரூ.26 லட்சம் சிக்கியது- ஹவாலா பணமா? விசாரணை
    X

    கோவையில் இன்று காலை போலீஸ் சோதனையில் ரூ.26 லட்சம் சிக்கியது- ஹவாலா பணமா? விசாரணை

    • மதுக்கரை போலீசார் நள்ளிரவு 12 மணி முதல் கோவை- வாளையாறு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மதுக்கரை போலீசார் நள்ளிரவு 12 மணி முதல் கோவை- வாளையாறு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வேலந்தாவளம் - அரிசி பாளையம் ரோட்டில் அதிகாலை 3 மணி அளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்தனர். சோதனையில் கைப்பையில் கட்டுகட்டாக பணம் இருப்பதை போலீசார் பார்த்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் பணம் எங்கு இருந்து வந்தது என விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாங்கள் தங்க நகை தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறோம்.

    தங்கத்தை நகைகளாக செய்து அதனை கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்து விட்டு பணத்தை கேரளாவுக்கு கொண்டு செல்வதாக கூறினர். ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவர்கள் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×