search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  இளம்பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி
    X

    கோவையில் இளம்பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி

    • ருது ஸ்ரீ தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் ருது ஸ்ரீ(24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலமாக வும் பல்வேறு தொழில் முதலீடுகளை பார்த்து வருகிறார்.அப்போது ஒரு நிறுவனத்தின் தொழில் முதலீடு தொடர்பான ஒரு அறிவிப்பு வந்தது.

    இதில் பணத்தை முதலீடு செய்ய ருது ஸ்ரீ விருப்பம் தெரிவித்தார்.‌ அப்போது அந்த நிறுவனத்தினர் ஒரு லிங்க் அனுப்பி அதில் உள்ள விபரங்கள் அடிப்படையில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறினார்.‌

    இதனை உண்மை என நம்பிய ருது ஸ்ரீ ரூ.12.06 லட்சத்தை அந்த நிறுவனத்தினர் கூறிய வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். சில நாட்களுக்கு பின்னர் அது போலி வெப்சைட் மூலம் தகவல் அனுப்பி பணம் பறிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ருது ஸ்ரீ புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×