என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வீட்டை திறந்து ரூ.20 லட்சம் கொள்ளை
- சுருதி கலையரசன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
- கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கோவை.
கோவை கணபதி பாரதிநகரை சேர்ந்தவர் சுருதி கலையரசன்(வயது51). இவர் அந்த பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
சுருதி கலையரசன், கோவை விமான நிலைய பகுதியில், பெண்கள் விடுதி நடத்த முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று காலை சுருதி கலையரசன், வீட்டை பூட்டி சாவியை, அங்கு பணியில் இருந்த காவலாளியிடம் கொடுத்து விட்டு வேலை விஷயமாக வெளியில் சென்றார்.
மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டி ருந்த ரூ.20 லட்சம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அப்போது சுருதி கலையரசன் வீட்டிற்கு, அவரது மகனின் நண்பர் என ஒருவர் வந்ததாகவும், அவர் சாவியை கேட்டு வாங்கி சென்றதாகவும் காவலாளி தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






