search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே மளிகை கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
    X

    பொள்ளாச்சி அருகே மளிகை கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது

    • ரோந்து சென்ற போது போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் வடக்கிப்பாளையம் போலீசார் பொள்ளாச்சி ரோட்டில் நள்ளிரவு ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கையில் வைத்து இருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.8,400 ரொக்க பணம், 22 சிகரெட் பாக்கெட்டுகள், ஒரு சுத்தியல்,ஸ்குரு டிரைவர், ஸ்பேனர் ஆகியவை இருந்தது. போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    செல்வகுமார் வடக்கிப்பாளையம் சுப்பையா நகரில் உள்ள முத்துக்குமார் (43) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்வகுமார் மீது சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடந்த மாதம் 12-ந் தேதி தான் சேலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் கொள்ளை வழக்கில் கைதாகி உள்ளார்.

    கைது செய்யப்பட்ட கொள்ளையன் செல்வகுமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×