என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான ஜெய்கணேஷ்
பண்ருட்டியில் நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து வீட்டில் திருடிய கொள்ளையன் கைது
- பண்ருட்டியில் நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து வீட்டில் திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- 50 பவுன் நகை 10 லட்சம் பணம் கொள்ளை அடித்து சென்றனர்.
கடலூர்:
பண்ருட்டி எல்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்சீனிவாசன். இவர் துபாயில் தனி யார் கம்பெனியில்வேலை பார்த்து வருகிறார். கடந்த 30 -ந் தேதி இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர் களுடன் கன்னியாகுமரி சுற்றுலா சென்று இருந்தனர். அப்போது வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் நகை 10 லட்சம் பணம் கொள்ளை அடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் பண்ருட்டி போலீசார்துரிதமாக செய ல்பட்டு நெல்லிக்குப்பம் எய்தனூர் செந்தில் முருகன் (24) மேல்பட்டா ம்பாக்கம்செல்வமணி(22) உளுந்தூர்பேட்டைபகுதி சேர்ந்த இனிய பெருமாள்ஆகியோரை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து பணம் நகை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு)மற்றும் தனிப்படை போலீசார்வலை வீசி தேடி வந்தனர். நேற்று வாகன சோத னையில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்த கொள்ளை வழக்கில்தேடப்பட்டு வந்தமுக்கியகுற்றவாளி மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம்ஷேக் என்கிற ஜெய்கணேஷ்(22)என்பவனை பொரி வைத்து பிடித்தனர். கைதான ஜெய்கணேஷ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களது கூட்டாளி உளுந்தூ ர்பேட்டை இளைய பெருமாள் என்பவனது மோட்டார் கொட்ட கைக்கு அடிக்கடி கஞ்சா அடிக்க சொல்லுவோம் அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் நாங்கள் விழுப்புரம், நெல்லிக்குப்பம் பகுதியில் 6 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளோம் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 30-ந் தேதி பண்ருட்டி எல்.ஆர்.பாளைய ம்பகுதியில் நோட்ட மிட்டோம் அங்கு பூட்டி இருந்த வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்தோம் அங்கிருந்த நாய் குறைக்காமல் இருக்கதடவி கொடுத்தேன் அந்த நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து குரைக்கா மல்பார்த்துக்கொண்டேன். எய்தனூர் செந்தில் முருகனுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை அடித்தோம். பண்ருட்டி போலீசார் எங்களை பொரிவைத்து பிடித்து விட்டனர் இவ்வாறு அவன் அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளான் இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கொள்ளை யர் களைஅதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா,சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் மற்றும் தனி படைபோலீஸாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டினார்






