search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வட மாநில அழகிகள் 6 பேர் மீட்பு-  புரோக்கர்கள் 4 பேர் கைது
    X

    கோவையில் வட மாநில அழகிகள் 6 பேர் மீட்பு- புரோக்கர்கள் 4 பேர் கைது

    • வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி துடியலூரில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சரவணம்ப ட்டி போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனை யில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர்கள் புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33), திருப்பூர் மங்கலத்தை சேர்ந்த முகமது ஆசிப் (24), திண்டுக்கல் முத்து நகரை சேர்ந்த மதன்தாஸ் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த ராஞ்சியை சேர்ந்த 25 வயது அழகி, பெங்களூரை சேர்ந்த 33 வயது அழகி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 21 வயது அழகி, குஜராத்தை சேர்ந்த 27 வயது அழகி, டெல்லியை சேர்ந்த 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.

    அவர்கள் 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படை த்தனர். கைது செய்யப்பட்ட 3 புரோக்கர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதேபோல காட்டூர் அலமு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புதுச்சேரியை சேர்ந்த புரோக்கர் சூர்ய பிரகாஷ் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் வீட்டில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த குஜராத்தை சேர்ந்த 20 வயது அழகியை போலீசார் மீட்டனர்.

    அவரை ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் சூர்ய பிரகாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×