என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.7.63 லட்சம் வாடகை பாக்கியால் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான குடியிருப்பு மீட்பு
- பல ஆண்டுகளாக இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் காவல்பிறை தெருவில் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பு உள்ளது.
இங்கு உள்ள ஒரு வீட்டில் டவுன் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வசித்து வந்தனர். பல ஆண்டுகளாக இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கான பாக்கி தொகை ரூ.7,63,530 உள்ளது. பல ஆண்டுகளாக வாடகை பாக்கியை திருப்பி செலுத்தாத காரணத்தினால் அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று குடியிருப்பில் வசித்து வந்த பெண்கள் வெளியேற்றப்பட்டு ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் நிலம் மீட்கப்படும் போது , செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலெட்சுமி,மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி, நெல்லை வருவாய் ஆய்வாளர் லெட்சுமணபாண்டியன், நெல்லை கிராம நிர்வாக அதிகாரி பொன் அய்யப்பன், தலையாரி முண்டசாமி ,டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்