என் மலர்
ராணிப்பேட்டை
- உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை
- பல மாதங்களாக எழுத்துகள் அழிந்தும், உடைந்தும் விழுந்து கிடக்கிறது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.
பொதுமக்கள், தெருக்களின் பெயர்களை அறியும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, தெருக்களின் பெயர்களை குறிக்கும் வகையில், பேரூராட்சி சார்பில் சில்வர் பெயர் பலகையில் பெயர்களை ஸ்டிக்கராக ஒட்டி வைக்கப்பட்டது.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தெரு பெயர் பலகைகளை, உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.
தற்போது, பெயர் பலகைகள், பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்து, வீணாகி உள்ளன.ஒரு சில தெருக்களில் உள்ள பெயர் பலகையில், எழுத்துகள் அழிந்தும், உடைந்தும் விழுந்து பல மாதங்களாக உள்ளன.
பெரும்பாலான இடங்களில் சில பெயர் பலகைகள் காணாமலும் போய் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொது மக்கள், தெருக்கள் பெயர் தெரியாமல் அலைகின்றனர். இதனால் வெளியூர் வாசிகள், தெருக்களின் பெயர்களை அடையாளம் கண்டு செல்வதில் சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் தெரு பெயர்களை ஸ்டிக்கர் ஒட்டியும் மற்றும் பெயர் பலகை இல்லாத இடத்தில் புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினால் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும்
- ஒவ்வொரு திங்கட்கிழமையும் அறிக்கை அளிக்க வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில், வாலாஜா வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை வரவேற்றார்.
கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-
தற்போது டாக்டர்கள் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ ர்கள் பற்றாக்குறை இருக்காது. கிராமப்புறத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினால் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் பிரசவங்கள் நடைபெறுவதில்லை என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறும் குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையில் இனிவரும் காலங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிரசவம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பிரசவங்கள் குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட டாக்டர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
- நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க.செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் 4,5,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் , 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து படிவங்கள் அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் 2024ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் ,
தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில் தி.மு.க.வின் ஒன்றிய, நகர,பேரூர், ஊர் கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்கு சாவடி நிலைய முகவர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்ததில் சிக்கினார்
- 3 செல்போன்கள் பறிமுதல்
கலவை:
திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் (வயது 19), இவர் தனது நண்பர்கள் சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அடுத்த திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்காக பைக்கில் 3 செல்போன்களை வைத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது பைக்கில் வைத்திருந்த 3 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஜஸ்வந்த் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஆற்காடு நல்ல தண்ணீர் குல தெருவை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
- ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று மாலை அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
அதன்படி, காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் சிவபெருமானுக்கு அன்னம் மற்றும் காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல்,அபிராமபுரம் பகுதியில் உள்ள சிவகாமவல்லி சமேத சர்வேசுவரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மூலத்துவாழியம்மன் அறக்கட்டளை மற்றும் அபிராமபுரம் சிவனடியார்கள் திருகூட்டம் செய்திருந்தனர்.
- விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் பேச்சு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வளர்மதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை, ராணிப்பேட்டை மாவட்ட த்தில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், அனா தினம் நிலம் என குறிப்பிட பட்டுள்ளதால் பயிர் காப்பீடு பெற முடியவில்லை.
சென்னசமுத்திரம் ஊராட்சி ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஊரகப் பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், மருந்தகங்களில் கால்நடை களுக்கு தேவையான மருந்துகள் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் விஷாரம் ஆகிய நகராட்சிகளின் கழிவுநீர் பாலாற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும், முகுந்தராயபுரம் ரெயில்வே சுரங்கபாதையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், பயிர் விளைச்சலுக்கு ஏற்ற காப்பீடு வழங்கப்படுகிறதா என வேளாண் மற்றும் வருவாய் துறை அலு வலர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்,
ஆற்காடு பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 தொடக்க வேளாண்மை கட்டிடங்கள் உள்ளன விவசாயிகள் தங்களது நெல் மூட்டை களை தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடங்களில் 100 டன் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம், அனாதின நிலம் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கால்நடை மருத்துவர்கள் மருந்தகங்களில் மட்டும் சிகிச்சை அளிக்காமல் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சிகிச்சை வழங்க வேண்டும், அனைத்து நகராட்சிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இடம் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இடிந்து விழும் நிலையில் உள்ளது
- புதிய கட்டிடம் அமைக்க வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டும் தனித்தனியாக ஊரின் மையப்பகுதியில் உள்ளது.
இந்த அலுவலகமானது கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் மேலாகி உள்ளன. தற்போது இந்த அலுவலகத்தின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனால் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகின்றன. இந்த கட்டிடத்தின் மேல் தளம் விரிசல்கள் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளது.
இந்த ஆபத்தான கட்டிடத்தில் தற்போது இரு அலுவலகங்களும் செயல் படவில்லை.
கிராமத்தில் உள்ள நூலக கட்டத்தின் சிறிய பகுதியில் தற்போது ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே போல் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கிராமத்தின் நடு பகுதியில் உள்ள இந்த இரு அலுவலக கட்டிடங்களும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டி ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்பாட்டி ற்கு அளிக்க வேண்டும் என வெளிதாங்கிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறத்தினர்
- சத்துணவு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்துணவு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சுசிலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் சுமார் 100 பேரை கைது செய்தனர்.
- தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கிறது
- 64 நாட்கள் தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பூஜை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி முரளிதரசுவாமிகளின் 63-வது ஜெயந்தி பூர்த்தி , பீடத்தின் 18-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மஹோத்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
64 நாட்கள் தொடர்ந்து காலை , மாலை இரு வேளைகளிலும் நடைபெறும் யாகத் திருவிழாவும், 64 நாட்களிலும் பரத நாட்டிய மாணவிகள், கலைஞர்கள் பங்கேற்கும் பரதத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு -கேது பெயர்ச்சி மகா யாகம் நாளை மறுநாள் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் , மாலையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகமும் நடைபெறுகிறது.
ராகு கேது பெயர்ச்சி யை முன்னி ட்டு மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, விருச்சி கம், தனுசு, கும்பம், மீனம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு-கேது திசை, புக்தி நடைபெறுபவர்களும் மகா யாகத்தில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து, சுவாமி தரிசனம் செய்து பயன் பெறலாம் என பீடாதிபதி முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்
- ந.வ.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ஆற்காடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திமிரி எம்.ஜி.ஆர். திடலில் நேற்று நடந்தது.
திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தாமரைப்பாக்கம் த.வ.கிருஷ்ணன், சொரையூர் எம்.குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். திமிரி பேரூர் கழக செயலாளர் டி.எஸ். கந்தசாமி வரவேற்றார்.
ஆற்காடு நகர செயலாளர் சங்கர் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆற்காடு ஒன்றிய செயலாளர் சாரதி என்கிற ஜெயச்சந்திரன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் ராகவன், விழா பாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் இராம.சேகர், கலவை பேரூராட்சி கழக செயலாளர் சதீஷ், கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.
கழக அமைப்பு செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலாளர் சுகுமார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் அன்பழகன், சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, தலைமை கழக பேச்சாளர் பாஸ்கர், மாநில அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். திமிரி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் உலகநாதன் நன்றி கூறினார்.
முன்னதாக விழா பாக்கம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் அறிமுகம் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமிரி எம்.ஜி.ஆர். திடலில் கணேஷ் குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆற்காடு தொகுதி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
- வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள இலுப்பை தண்டலம் கிராமத்தில் அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா இன்று அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் அதிகாரிகளுடன் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் மணல் கடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்டவுடன் மணல் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா மணல் கடத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்த வாகனங்களை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டா கத்தியால் வெட்டினார்
- வாலிபர் கைது-பரபரப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தின் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடையில் உள்ளன.
முருகேஷ் என்பவர் பேன்சி ஸ்டோரும், பிரசாந்த் என்பவர் பூ வியாபாரமும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மார்க்கெட்டில் திடீரென பட்டா கத்தியுடன் வாலிபர் ஒருவர் புகுந்தார்.
கடைகளை மூடக்கோரி மிரட்டி முருகேசையும், பிரசாந்திடமும் தகராறில் ஈடுபட்டார். மேலும் பட்டா கத்தியால் அவர்களை வெட்டினார். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இதனை தடுக்க வந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். ரகளையில் ஈடுபட்ட அம்பேத்கார் நகரை சேர்ந்த பரணி (வயது 25)என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டில் வாலிபர் புகுந்து வியாபாரிகளை பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






