என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
    X

    சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    • சாயல்குடி பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் ஆகியோர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    சாயல்குடி

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன் னிட்டு ராமநாதபுரம் மாவட் டம் சாயல்குடி பேரூராட்சி–யில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், கடலாடி அரசு மருத்துவம–னையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் கதர்கிராம வளர்ச்சி நல வாரியத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் 1,500 நபர்க–ளுக்கு 5 கிலோ அரிசி மற் றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட் டது.

    சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவ–ணன் தலைமை தாங்கினார். சாயல்குடி தி.மு.க. பேரூர் கழகச் செயலாளர் வெங்க–டேஷ் ராஜ், சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால் ராஜ், ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், சாயல்குடி நகர் இளைஞர் அணி செய–லாளர் விக்னேஷ்ராம், மாவட்ட பிரதிநிதி புனித ராஜன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் சார்பில் தூய்மை பணியா–ளர்களுக்கு சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் ஆகியோர் நலத் திட்ட உதவிகளை வழங்கி–னார்.

    இந்நிகழ்ச்சியில் முதுகு–ளத்தூர் சட்டமன்ற அலுவ–லர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், சாயல்குடி பேரூர் கழக துணை செ–யலாளர் சுப்பிரமணியன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முனிஸ்வரன் இளைஞர் அணி முத்துக்கு–மரன், குருசாமி, கற்குவேல் உள்ளிட்ட தி.மு.க. நிர்வா–கிகள் கலந்துகொண்டனர்.

    சாயல்குடி பேரூராட்சி–யில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச் சிக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமே–கலை பாக்கியராஜ், வார்டு உறுப்பினர்கள் காமராஜ், ஆபிதா அனிபா அண்ணா, அழகர் வேல் பாண்டியன், குமரையா, ஆகியோர் முன் னிலை வகித்தனர்

    தூய்மை பணியாளர்க–ளுக்கு அமைச்சர் சார்பில் தி.மு.க. சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய–பாலன் நலத்திட்ட உதவி–களை வழங்கினார். இதே போல் கடலாடி அரசு மருத்துவமனையில் நடை–பெற்ற நிகழ்ச்சிக்கு கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கி, அமைச்சர் ராஜ–கண்ணப்பன் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    இந்நிகழ்ச்சியில் கடலாடி நகர செயலாளர் ராமசாமி, ஊராட்சி தலைவர்கள் ஏ.புனவாசல் ராஜேந்திரன், கீழக்கிடாரம் மீனாள் தங் கையா, முதுவை முருகன், பாலச்சந்தர் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற் றனர்.

    Next Story
    ×