என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை, பழனி வழியாக பாலக்காடுக்கு ெரயில் விட வேண்டும்
- ராமேசுவரத்தில் இருந்து மதுரை, பழனி வழியாக பாலக்காடுக்கு ெரயில் விட வேண்டும்.
- ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமேசுவரம்
உலகப் புகழ்பெற்ற ராமேசுவரத்தில் 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்திருப்பது ராமேசுவரத்துக்கு பெருமையாகும்.
இதனால் உலகம் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் சிவஸ்தலமான ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலில் வழிபாடு செய்வதற்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பெரும்பாலான தமிழகப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆன்மீகப் பயணமாக மற்ற தலங்களான பழனி, திருச்செந்தூர், பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் ராமேசுவரம் வந்து மீண்டும் இந்த புனித தலங்களுக்கு செல்வதற்கு நேரடியாக ரெயில் போக்குவரத்து இல்லை. பஸ்களில் செல்ல வேண்டும் இதற்கு அதிக கட்டணம், அதிக பயண நேரம் ஆவதால் அதைத்தவிர்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.
எனவே ராமேசுவரத்தை மையப்படுத்தி மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பாலக்காடு, திருச்சியை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கும் பிரிந்து சென்றது.
இந்த ரெயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வசதியாக இருந்தது. இந்த ரெயில்கள் இயக்கப்பட்டபோது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்தவித சிரமமின்றி பழனிக்கு சென்று வந்தனர்.
தற்போது அகல ரெயில் பாதையாக மாற்றிய பிறகு இந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்ப ட்டது. இதனால் பயணிகள் பழனி, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டனர்.
பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட பாலக்காடு,திருச்சி பயணிகள் ரெயிலை முன் பதிவு வசதியுடன் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






