search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • கீழக்கரையில் அதிகரிக்கும் சாலை விதி மீறல்களால் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
    • இதுெதாடர்பாக அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கையினால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போலீஸ் நிலையத்தில் நிலவும் போலீசார் பற்றாக் குறையால் நகரில் பெரிய 'தலைவலியாக' மாறி வரும் நெரிசலுக்கு தீர்வு காணுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் விதீமீறல்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

    போக்குவரத்து இடையூறு காரணமாக பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்பு லன்சு செல்ல முடியவில்லை. விரும்பிய இடத்தில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்கி வருகின்றனர். சில சமயம் வலது, இடது இரு பக்கங்களிலும் லாரி நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    கீழக்கரையின் நிலைமை குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும். நிரந்தர போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைத்திட கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடனடியாக நட வடிக்கை எடுத்து கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×