search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் வழங்கும் சிறப்பு முகாம்
    X

    கடன் வழங்கும் சிறப்பு முகாம்

    • சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் (டாம்கோ), பிற்படு த்தப்பட்டோர் (டாப் செட்கோ) பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2022--23 ஆண்டுக்குரிய தனி நபர் கடன், சுய உதவிக்குழு, சிறுதொழில் தொடங்கவும், கல்விக்கடன் வழங்கவும் சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.

    திருவாடானையில் நாளை (8-ந்தேதி), ஆர்.எஸ்.மங்கலத்தில் 9-ந் தேதி, கடலாடியில் 13-ந் தேதி, கமுதியில் 14-ந் தேதி, பரமக்குடியில் 16-ந் தேதி, கீழக்கரை 19-ந் தேதி, ராமேசுவரத்தில் 20-ந் தேதி, முதுகுளத்துாரில் 22-ந் தேதிகளில் முகாம் நடக்கிறது.

    மேலும் விபரங்களுக்கு ராம நாதபுரம் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

    Next Story
    ×