search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்தவ தேவாலாயத்தை சீரமைக்க வேண்டும்
    X

    கிறிஸ்தவ தேவாலாயத்தை சீரமைக்க வேண்டும்

    • முழுமையாக இடிந்துவிழும் முன்பு கிறிஸ்தவ தேவாலாய சீரமைப்பை தொடங்க வேண்டும்.
    • பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள தனுஷ்கோடி இலங் கைக்கு மிகவும் குறுகிய தொலைவில் உள்ளது. 1910-ம் ஆண்டு காலகட்டத் தில் மீன்பிடி தொழில் அதிக ளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்திய இலங்கை பகுதியில் வணிக கப்பல்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்த ஆங்கிலேயர் கள் திட்டமிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு பாம்பன் கால்வாய் பகுதியில் ரெயில் பாலம் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக் கப்பட்டது. இதன் பின்னர் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கி யது. இதன் காரணமாக தனுஷ்கோடி மிகப்பெரிய அளவிலான துறைமுக நக ரமாக மாறியது.

    50 ஆண்டுகள் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் கள் போக்குவரத்தில் அதிக ளவில் வியாபாரம் நடை பெற்று வந்தது. 1910-ம் ஆண்டு காலகட்டத்தில் தனுஷ் கடியில் கிறிஸ்தவ தேவாலாயம் கட்டப்பட்டது. 1964 ஆண்டு ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக தனுஷ்கோடி துறைமுக நகரம் சேதமடைந்தது.இதில், தேவாலாயம், ரெயில் நிலை யம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களும் தரை மட்டமானது.

    தனுஷ்கோடியை சீர மைக்க முயன்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தனுஷ்கோடி யின் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ராமேசு வரம் வருகை தருகிறார்கள். அவர்கள் அனைவரும் முகுந்தராயர் சந்திரம் வரை சென்று அங்கிருந்த கடற் கரை வாகனங்களில் சென்று கடற்கரையின் பரந்து விரிந்த அழகை பார்த்து ரசித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தடையின்றி தனுஷ்கோடி வரை சென்று வந்தனர். இதன் காரணமாக ஆண்டுக்கு 2 கோடி பேர் வந்து செல்லும் சுற்றுலா இடமாக தனுஷ்கோடி மாறி யது.

    தனுஷ்கோடியை பழமை மாறமல் ரூ.5 கோடி மதிப் பீட்டில் தேவாலாயம் புதுப் பிபித்தல், சுற்றுலா பயணிக ளுக்கு தேவையான அடிப் படை கட்டமைப்பு களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தனுஷ்கோடி பகுதியை சீரமைக்க மத்திய, மாநில அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி களை மேற்கொண்டு வரு கின்றனர்.

    தேவாலாயம் தொடர்ந்து 80 சதவீதம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து சூறைக்காற்று வீசுவதால் முழுமையாக சேதமடைவதற்குள் பழமை மாறாமல் புதுபிக்க பணி களை விரைந்து தொடங்கிட வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×