search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி திருக்கல்யாணம்
    X

    பூப்பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்.

    ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி திருக்கல்யாணம்

    • ராமேசுவரம் கோவிலில் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் இன்று மாலை நடக்கிறது.
    • கடந்த மாதம் 23-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கடந்த மாதம் 23-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது காலை, மாலையில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை மாற்றுதல் நடைபெற்றது.

    ராமதீர்த்தம் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படியில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளி மாலை மாற்றி கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (3-ந் தேதி) இரவு நடைபெறுகிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி-அம்பாளுக்கு இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×