search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கை கழுவுதல் நுட்பங்கள், கை கழுவவதின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கை கழுவுதல் நுட்பங்கள், கை கழுவவதின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் டயானா, களப்பணியாளர் அருள் சகாய செல்வி ஆகியோர் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 14 கிராமங்களில் 64 குக்கிராமங்களில் பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கியிலும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பிரசாரம் செய்தனர். அரசு மருத்துவமனை டாக்டர் அருண்குமார் மற்றும் ஊழியர்கள் வாகன பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×