search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியல்
    X

    பொதுமக்கள் சாலை மறியல்

    • கடலாடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தனிச்சியம் கிராமத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

    இதை கண்டித்து டி.கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் வாலிநோக்கம் விலக்கு அருகே இன்று காலை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் பொதுமக்கள் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக வந்து டி கிருஷ்ணாபுரம் கிராமத்திலேயே ஊராட்சி அலுவலக கட்டிடம் இயங்கும் என தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×